கனிமொழி மற்றும் மைனா... ஒரே நாளில் காண நேர்ந்தது.. இரண்டுமே மனதின் வேதனையையே அதிகப்படுத்தின.. முன்னது, நான் கடந்து வந்த வழியையும், பின்னது, என்னுள் படர்ந்த வலியையும் நினைவு படுத்தின.."காதலித்து பாருங்க வாழ்க்கை அழகாகும்" -எவ்வளவு ஆழமான, அழுத்தமான உண்மை!! வாழ்க்கை அழகாகிறதோ இல்லையோ நமது கற்பனையும் எண்ணங்களும் அழகாகும் இல்லையேனும் பின்னாளில் அஃது தரும் நினைவுகளேனும் பசுமையானதாய் இருக்கும்.
காதலியின் காலில் சிறு முள் தைத்தாலும் தன்னுயிரே போனதாய் வருந்தும் பாமரக் காதலன் அதரப் பழமைதான் என்றாலும் நெஞ்சம் பரிதவிக்குதன்றோ பசுமையாய் உள்ளதன்றோ!!
இன்றைய சூழலில் மேட்டுக்குடியினர் காதல்தாம் மாண்பு மிகுந்தது என்று மக்கள்தம் மனதில் விஷமிகு வித்து விதைந்துள்ளது.. ஆனால் கடுகளவும் கள்ளமில்லாத பாகற்காய் அளவும் பாங்கிழைக்காத இத்தகைய பாமரரிடையே தான் பாசமும் அன்பும் கொட்டிக்கிடக்கின்றது என்பது கொட்டமடிக்கத் தேவையில்லை
நேரமில்லை,,, துயில் என்னை ஆட்கொள்கிறது. முதன் முயற்சியாதலால் சிறிது மூச்சு வாங்கி அயர்ச்சி நீங்கி ஆற அமர அடுத்த கட்டத்துக்கு தயாராகி வருகிறேன்... சொற்குற்றமோ பொருட்குற்றமோ இருப்பின் அரிச்சுவடி மாணாக்கனை மன்னிக்கவும்

No comments:
Post a Comment